கனவுகளைப்பற்றி யோசிப்பதும் அவற்றைத்திரும்ப நினைத்துப்பார்ப்பதும் சுவாரசியமாக இருக்கிறது
நேற்றுவந்த கனவில் இடிந்த வீடுகளும் கோழிக்குஞ்சுகளும் இருந்தன.
மண்சுவர் நான்கடி இருக்கும்.அதனருகில் ஒரு முருங்கைமரம் இருந்தது
அங்கு படுத்திருந்தவர் இறந்துபோன தாத்தா என்றுதான் நினைக்கிறேன்.
இன்னொருபுறம் திண்ணையிலிருந்து கோழிக்குஞ்சு ஒன்று உடைந்த முட்டைகூடு ஒன்றை தூக்கிக்கொண்டு என்காலடியில் கடந்து சென்றது
அதனுடன் அதன் தாயான பெரிய கோழியும் வந்தது
அந்தக்காட்சி கனவின்போதே சிலிர்ப்பாய் இருந்தது
பிறகு தூங்கும் தாத்தா இப்போது அப்பாவாக இருந்தார்
அவரை எழுப்புவதற்காக கைப்பனியனுடன் ஒருவர் வந்தார்
யார் என்று பார்த்தால் அவரும் அப்பாவாகவே இருந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment